கயத்தாறில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம் : சீறிப்பாய்ந்த காளைகள்!
நிருபர்
February 24, 2024
கயத்தாறில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம் : சீறிப்பாய்ந்த காளைகள்!
<p><b>கயத்தாறில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.</b><br></p><p>தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் இப்போட்டியில் கலந்து கொண்டன.</p><p>கயத்தாறு-கடம்பூர் சாலையில் நடு மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி, தேன்சிட்டு என்று மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெறுகிறது.</p><p>முதலில் நடைபெற்ற நடு மாட்டு வண்டியில் 15 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போக வர 8 மைல் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இப்போட்டியில், கடம்பூர் இளைய ஜமீன்தார் கருணாகரராஜா மாட்டு வண்டி முதல் பரிசையும், 2-வது பரிசை சண்முகபுரம் மெடிக்கல் பி.விஜயகுமார் மாட்டுவண்டியும், 3-வது பரிசை சீவலப்பேரி துர்காம்பிகை மாட்டுவண்டியும், 4-வது பரிசை வேலங்குளம் எம். கண்ணன் மாட்டுவண்டியும் பரிசை தட்டிச்சென்றது.</p>