<p><b>ஈஷா யோகா மைய ரத யாத்திரை இன்று ( பிப்.,16 )&nbsp; இரவு தூத்துக்குடிக்கு வருகை தந்தது.</b></p><p>கோவை ஈஷா யோகா மையத்தில் மாா்ச் 8-ஆம் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெறவுள்ளது. இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த தமிழகம் முழுவதும் ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.</p><p>இதன் ஒரு பகுதியாக ஈஷா யோகா மைய ரத யாத்திரை இன்று ( பிப்.,16 )&nbsp; இரவு தூத்துக்குடிக்கு வருகை தந்தது. மேள தாளம் முழங்க சிவபக்தா்கள் ரதத்துக்கு வரவேற்பு அளித்தனா்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/02/16/11708095815.jpg" style="width: 100%;"><br></p><p>ஆதியோகி சிலை கொண்ட ஒரு ரதமும், நாயன்மாா்கள் திருமேனி கொண்ட ஒரு ரதமும் ஒன்றன்பின் ஒன்றாக நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.&nbsp;</p><p>அப்போது, மகா சிவராத்திரி விழா குறித்த அழைப்பிதழ்கள் துண்டுப் பிரசுரங்களாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.</p>