தமிழகத்தில் இதுவரை 59 ஆயிரத்து 226 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
நிருபர்
January 24, 2021
தமிழகத்தில் இதுவரை 59 ஆயிரத்து 226 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
<p><b>தமிழகத்தில் இதுவரை 59 ஆயிரத்து 226 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது</b>.</p><p>தமிழகத்தில் நேற்று 168 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதில் 16 ஆயிரத்து 800 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்பு மருந்து தயாராக வைக்கப்பட்டிருந்தது. <br></p><p>இந்தநிலையில் 7 ஆயிரத்து 381 பேருக்கு ‘கோவிஷீல்டு' தடுப்பு மருந்தும், 194 பேருக்கு ‘கோவேக்சின்' தடுப்பு மருந்தும் என மொத்தம் 7 ஆயிரத்து 575 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. <br></p><p>அந்தவகையில், தமிழகத்தில் இதுவரை 57 ஆயிரத்து 965 பேருக்கு ‘கோவிஷீல்டு' தடுப்பூசியும், 1,261 பேருக்கு ‘கோவேக்சின்' தடுப்பூசி என 59 ஆயிரத்து 226 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.<br></p>