<p><b>செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் அஞ்சலக சேமிப்பு கணக்கு துவக்கம் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் வழங்கும்&nbsp; விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்&nbsp; கலந்துகொண்டு,&nbsp; அஞ்சலக சேமிப்பு கணக்கை துவங்கி, கணக்கு புத்தகத்தை வழங்கினார்.</b><br></p><p>பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக `செல்வமகள் சேமிப்புக் கணக்கு' (சுகன்யா சம்ரிதி யோஜனா) என்ற திட்டத்தை, 2015-ம் ஆண்டு முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.<br></p><p>இந்நிலையில், விளாத்திகுளம் தொகுதி, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட , அரியநாயகிபுரம், சூரங்குடி, வேம்பார் உள்ளிட்ட கிராமத்தில் , அஞ்சல்துறை கிளையில்,&nbsp; பத்து வயதுக்குள் இருக்கும் பெண் குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் செல்வமகள் சேமிப்புத்&nbsp; திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கைத் , தனது சொந்த செலவில்&nbsp; &nbsp;விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்&nbsp; துவக்கி அதன் வங்கி கணக்கு புத்தகத்தை வழங்கும் விழாவில்,&nbsp; &nbsp;விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்&nbsp; கலந்து கொண்டு அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகத்தை&nbsp; வழங்கினார்.<br></p><p>இந்நிகழ்வில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், மாவட்ட கவுன்சிலரும் ஒன்றிய செயலாளருமான நடராஜன்,முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் - கோவில்பட்டி பாண்டியராஜ்,&nbsp; துணை அஞ்சலக கண்காணிப்பாளர் சீதா லெட்சுமி,&nbsp; அஞ்சல ஆய்வாளர் ( பொ)&nbsp; கேத்ரபாலன், வணிக மேம்பாடு அலுவலர்கள் மாலதி, சங்கரேஸ்வரி,</p><p>முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள் என்.கே.பி.வரதராஜ பெருமாள், சோலை ராஜ், பொதுக்குழு உறுப்பினர் கடற்கரைவேல்,&nbsp; நெல்லை மண்டல வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூட உறுப்பினர் வைப்பார் செண்பகப்பெருமாள், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளர் போடுசாமி,அம்மா பேரவை ஒன்றியச் செயலாளர்&nbsp; சுபாஷ் சந்திரபோஸ், மாணவரணி ஒன்றியச் செயலாளர்&nbsp; ராமநாதன்,&nbsp;</p><p> இலக்கிய அணி இணைச்செயலாளர் இளங்கோ, அவைத் தலைவர் முத்துச்சாமி, சுரங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், மேல்மந்தை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்&nbsp; சபாதி, தங்கமாள் புரம் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து, தாமரை, ஜேசு, அப்பணசாமி, உள்ளிட்ட கழக நிர்வாகிகள், அஞ்சல் துறை அலுவலர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள்,&nbsp; குழந்தைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>