10ம் வகுப்பு பாஸோ ஃபெயிலோ வேலை இருக்கு... ஆனால், சென்னையில்தான் வேலை!
நிருபர்
January 20, 2024
10ம் வகுப்பு பாஸோ ஃபெயிலோ வேலை இருக்கு... ஆனால், சென்னையில்தான் வேலை!
<p><b>சென்னையில் ஊர்க்காவல் படையில் சேர ஜனவரி 22 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.</b><br></p><p>சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: </p><p>சென்னை பெருநகர ஊர்க்காவல்படையில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.</p><p>கீழ்காணும் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்</p><p>சென்னை பெருநகர ஊர்க்காவல்படையில் சேர விரும்புவோர் 18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.</p><p>கல்வித்தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள்</p><p>குற்றப்பின்னணி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும்</p><p><br></p><p>சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்</p><p>குடும்ப அட்டை (Ration Card) வைத்திருக்க வேண்டும்</p><p><br></p><p>தேர்ச்சி செய்யப்படும் ஊர்க்காவல்படையினர்களுக்கு 45 நாட்கள் தினசரி 1மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும், பயிற்சி முடித்த பின்னர் அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணிபுரிய அனுப்பப்படுவர்.</p><p><br></p><p>சீருடை, தொப்பி, காலணி ஆகியவை வழங்கப்படும். இரவு ரோந்து பணி, பகல் ரோந்து பணி மற்றும் போக்குவரத்து பணிக்கு ரூ.560/-ம் சிறப்பு படியாக வழங்கப்படும்/பெண்களுக்கு பகல்</p><p>ரோந்து பணி மட்டுமே.</p><p><br></p><p>சிறப்பாக மெச்சத்தகுந்த வகையில் பணிபுரிவோருக்கு தமிழக முதல்வர் பதக்கம் மற்றும் ஜனாதிபதி பதக்கம் ஆகியவை தகுதி அடிப்படையின் கீழ் வழங்கப்படும்.</p><p><br></p><p>மேற்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை கீழ்காணும் முகவரியில் 22.01.2024 முதல் இலவசமாக பெற்று பூர்த்தி செய்து 10.02.2024 மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம்.</p><p><br></p><p>முகவரி : சென்னை பெருநகர ஊர்க்காவல்படை தலைமை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், சைதாப்பேட்டை, சென்னை - 15. தொடர்பு எண்: 9498135190, 9566776222. சேவை மனம் கொண்ட யாவரும் ஊர்க்காவல்படையில் சேர்ந்து மக்களுக்கு தொண்டு செய்யலாம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><br></p><p>ஊர்க்காவல் படை என்பது இந்தியக் காவல் துறைக்கு துணையாக செயல்படும் தன்னார்வ படையாகும்.</p>