<p><b>சேலத்தில் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கான சுடர் தொடர் ஓட்டத்தை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜன.18) காலை தொடங்கி வைத்தார்.</b></p><p>இளைஞரணி மாநாடு முன்னிட்டு சேலம் மாநகர் முழுவதும் கொடிக் கம்பங்கள், திமுக போஸ்டர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையிலும் பல இடங்களில் இரும்பு கொடி கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.</p><p>இந்நிலையில், மக்கள் உயிரை பணயம் வைத்து தான் விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டுமா என்ன? என அறப்போர் இயக்கம் இதை கண்டித்துள்ளது.</p><p>இதுகுறித்து அந்த இயக்கம் தனது X தளத்தில் வெளியிட்ட பதிவில்,&nbsp; &nbsp;</p><p>”உங்களை வரவேற்க மக்கள் உயிரை பணயம் வைப்பது பற்றி உங்களுக்கு கவலை இருக்கா மு.க. ஸ்டாலின், உதயநிதி?<br></p><p>நெடுஞ்சாலையில் அதுவும் ஒரு மேம்பாலத்தில் இவ்வாறு இரும்பு கொடி கம்பங்களை வைப்பது ஆபத்து என்று உங்களுக்கு தெரியாதா ராஜேந்திரன். பொறுப்புள்ள சட்டமன்ற உறுப்பினர் இது போன்று மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விஷயத்தை செய்யலாமா?</p><p>சட்டமன்ற உறுப்பினராக உங்கள் பணியை சிறப்பாக செய்தாலே உங்களுக்கு மக்கள் மத்தியிலும் உங்கள் கட்சியிலும் நல்ல விளம்பரம் கிடைக்குமே. இப்படி மக்கள் உயிரை பணயம் வைத்து தான் உங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டுமா என்ன?</p><p>இவ்வாறு அறப்போர் இயக்கம் தனது X தளத்தில் விமர்சித்துள்ளது.</p>