தூத்துக்குடியில் திருமணமான இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
நிருபர்
January 18, 2024
தூத்துக்குடியில் திருமணமான இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
<p><b>தூத்துக்குடியில் திருமணம் ஆகி ஒரு ஆண்டே ஆன நிலையில், இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்தது குறித்து தென்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.</b><br></p><p>தூத்துக்குடி எப்சிஐ குடோன், இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. கூலி தொழிலாளியான இவரது மனைவி சிவ பார்வதி ( 24 ) . திருமணமாகி ஓராண்டே ஆன நிலையில் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.</p><p> தகவல் அறிந்த தென்பாகம் போலீசார், சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p> மேலும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.</p>