தூத்துக்குடி மாநகரில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வலர்களுக்கு மேயர் கொடுத்த வேண்டுகோள்!
நிருபர்
December 21, 2023
தூத்துக்குடி மாநகரில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வலர்களுக்கு மேயர் கொடுத்த வேண்டுகோள்!
<p><b>தூத்துக்குடி மாநகரில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வலர்கள் மாநகராட்சி சுகாதார அலுவலர்களை தொடர்பு கொண்டு பொருட்களை வழங்கவும் என தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.</b><br></p><p>வரலாறு காணாத அளவுக்கு பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய தண்ணீர் மாண்புமிகு முதல்வர் அவர்களின் உத்தரவின்படி, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர், ஆகியோர் மேற்பார்வையில் அகற்றப்பட்டு வருகிறது. </p><p>வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வலர்கள் சிலர் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வழங்கிவிட்டு செல்வதால் மக்கள் மாநகராட்சி நிர்வாகத்தின் மீது அதிருப்தி தெரிவிக்கும் நிலை உள்ளது. </p><p>மாநகராட்சி பகுதியில் நிவாரணப் பொருட்கள் கொண்டுவரும் தன்னார்வலர்கள் மாநகராட்சி சுகாதார அலுவலர்களை தொடர்பு கொண்டு பொருட்களை வழங்கவும் என கேட்டுக்கொள்கிறேன். என தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.</p>