<p><b>இசை மாமேதை நல்லப்ப சுவாமிகளின் பிறந்தநாளை முன்னிட்டு, விளாத்திகுளத்தில் உள்ள அவரது திருஉருவப்படத்திற்கு, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.</b></p><p>இசை மகாசமுத்திரம் என்று மாபெரும் இசை மேதைகளாலும் அறிஞர்களாலும் போற்றப்பட்ட விளாத்திகுளம் நல்லப்ப சுவாமிகள், விடுதலைப் போராட்ட வீரரும் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரருமான வீரபாண்டிய கட்டபொம்மனின் உறவினரான காடல்குடி பாளையக்காரரின் வழிவந்தவர்.</p><p>தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் சோமசுந்தர ஜெகவீர கஞ்செய பாண்டியன் - கோவம்மாள் தம்பதியரின் ஐந்தாவது மகனாக 24.09.1889இல் பிறந்தார். இன்று செப்டம்பர் 24ஆம் தேதி 135 ஆவது பிறந்தநாள் விழா அவருக்கு கொண்டாடப்படுகிறது.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2023/09/24/11695539622.jpg" style="width: 100%;"><br></p><p>இதனையடுத்து, விளாத்திகுளத்தில் உள்ள அவரது திருஉருவப்படத்திற்கு, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.</p><p>இந்நிகழ்வில் புதூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் சுமதிஇம்மானுவேல், வார்டு செயலாளர் அய்யனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>