<p><b>பசுவந்தனை அருகே மது குடிப்பதை தந்தை கண்டித்தால் பிராந்தியில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.&nbsp;</b></p><p>இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி மகன் வேல்முருகன் (28). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் தினசரி வீட்டுக்கு குடிபோதையில் வருவதால் அவரது தந்தை சத்தம் போட்டுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த வேல்முருகன் பிராந்தியில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் முத்துமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.</p>