ஜனவரி 3- ஆம் தேதி மதுரை வர வேண்டும் - மு.க.அழகிரி அழைப்பு
நிருபர்
December 25, 2020
ஜனவரி 3- ஆம் தேதி மதுரை வர வேண்டும் _ மு.க.அழகிரி அழைப்பு
<p><b>தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் ஜனவரி 3- ஆம் தேதி மதுரை வர வேண்டும் என முன்னாள் அமைச்சரும்,மறைந்த முன்னாள் திமுக தலைவருமான மு.கருணாநிதி மகனுமான மு.க.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.</b></p><p>அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். </p><p>இந்த ஆலோசனை கூட்டம் 03/01/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணியளவில் மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் நடைபெறும்.<br></p><p>இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள என்னுடைய ஆதரவாளர்கள் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் வரும் பொழுது முகக்கவசம் அணிந்து வர வேண்டும்" என தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.<br></p>