குளத்தூரில் மாட்டு வண்டி பந்தயத்தில் சீறி பாய்ந்த காளைகள் - முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!
நிருபர்
July 17, 2022
குளத்தூரில் மாட்டு வண்டி பந்தயத்தில் சீறி பாய்ந்த காளைகள் - முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!
<p><b>விளாத்திகுளம் அருகே குளத்தூரில் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு இன்று காலை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது</b>. </p><p>பெரிய மாடு, சின்னமாடு, பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தை விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.</p><p>உடன், ஒன்றிய கவுன்சிலர் மணியகாரம்பட்டி விஜயகுமார், வைப்பார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட பிரதிநிதியுமான செண்பகப்பெருமாள், மாவட்ட பிரதிநிதி பிச்சைமணி, கிளை செயலாளர் வேல் மயில், தங்க செல்வம், சுரேஷ் உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p><p>இந்த மாட்டு வண்டி போட்டியில் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.</p><p>மாட்டு வண்டி பந்தயத்தில், சீறிபாய்ந்த காளைகளை மாட்டு வண்டி பந்தய ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடியிருந்து ஆர்வமுடன் கண்டு களித்தனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.</p>