<p><span style="font-weight: 700;">தூத்துக்குடி மாவட்டம் அழகேசபுரத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை நடைப்பெற்றது</span>.</p><p>தூத்துக்குடி நடராஜபுரம், அழகேசபுரம் 8வது வார்டு பகுதியில் ரஜினி மக்கள் மன்றத்தினர் உறுப்பினர் சேர்க்கை நடத்தினர்.<br></p><p>இதில் பொது மக்கள் தானாக&nbsp; முன் வந்து தங்களை இணைத்து கொண்டனர். ரஜினி கட்சி ஆரம்பிக்கும் முன்னரே மக்கள் வோட்டர் கார்டு, போட்டோ கொண்டு வந்து தங்களை இணைத்து கொள்ளும்படி கூறியதனால்&nbsp; மகிழ்சியாக மன்றத்தினர் சேர்கையில் ஈடுபட்டனர்.<br></p><p>இதில் வடக்கு மண்டல செயலாளர் s. செல்வம், மாவட்ட வர்த்தக அணி s. மாரிமுத்து, வடக்கு மண்டல செயற்குழு உறுப்பினர் s. மாரியப்பன், k. ரெங்கன் மற்றும் 8வது வார்டு செயலாளர் எஸ்ரா ஆகியோர் உடனிருந்தனர்.</p>