தமிழகத்தில் மூன்றே மாதங்களில் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகள் 33 பேர் கைது
நிருபர்
December 17, 2020
தமிழகத்தில் மூன்றே மாதங்களில் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகள் 33 பேர் கைது
<p><b>தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 127 சோதனைகளை நடத்தியதில், லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகள் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</b><br></p><p>தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனைகளின்போது கணக்கில் வராத 7 கோடி ரூபாய், 7 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி, 10 கேரட் வைரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.<br></p><p>சுற்றுச்சூழல் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலுவலகங்களிலும், அவற்றில் பணிபுரிவோர் வீடுகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் அளவுக்கு அதிகமாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.<br></p><p>மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் துறை, சார்பதிவாளர் அலுவலகங்கள், போக்குவரத்துத் துறை அலுவலகங்கள் ஆகியவற்றில் நடந்த சோதனைகளில் மொத்தத்தில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது<br></p>