<p><b>கல்லூரி முதல்வரை மாற்ற&nbsp; தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு இசக்கிராஜா தேவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</b><br></p><p><b style="color: rgb(255, 156, 0);">தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர்&nbsp; இசக்கிராஜா தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:</b></p><p>மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி முதல்வரை உடனடியாக பணி மாறுதல் செய்ய வேண்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 12 மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்.</p><p>கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிஎம்டி கல்லூரி&nbsp; மாணவர்கள் தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி வகுப்புகளை&nbsp; புறக்கணிப்பு செய்தனர். அதில் பங்கு பெற்ற மாணவர்கள் மீது கல்லூரி முதல்வர் ஹரிகெங்காரம் தன்னுடைய முறைகேடுகள் மற்றும்&nbsp; மோசடிகளை மறைப்பதற்காக&nbsp; சதி&nbsp; திட்டமிட்டு மாணவர்களுடன்&nbsp; மோதலை உருவாக்கிவிட்டார். மேலும் மாணவர்கள்&nbsp; &nbsp;மீது&nbsp; காவல் துறையில்&nbsp; பொய்யான புகார் கொடுத்து அவர்கள் மேல்&nbsp; வழக்குகளை பதிவு செய்ய வைத்தார்.</p><p>கல்லூரியின்&nbsp; முதல்வர் தன்னுடைய மோசடியை&nbsp; மறைப்பதற்காக இன்று வரை மாணவர்களை கேடயமாக பயன்படுத்தி அவர்களுக்குள் பிரிவினையை உருவாக்கி&nbsp; வருகிறார். இவருடைய தவறான&nbsp; செயலால்&nbsp; அங்கு படித்த மற்றும் படிக்கும்&nbsp; மாணவர்களின்&nbsp; கல்வி,&nbsp; வேலைவாய்ப்பு&nbsp; பெரிதும் பாதிக்கபட்டுவிட்டது. மேலும் மாணவர்கள்&nbsp; &nbsp;மன உளைச்சல்&nbsp; மற்றும் சமூக பொருளாதார பிரச்சனையில் உள்ளனர். கல்லூரியில் தனி அலுவலர் நியமனம் செய்த பிறகும் இந்த நிலை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது.</p><p>இந்தப் பிரச்சினையில் தென்காசி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் போடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் மாணவர்களின் மீது போடப்பட்ட பொய் வழக்கு வாபஸ் பெறப்பட வேண்டும் என்று கல்லூரி முதல்வருக்கு உத்தரவு போடப்பட்டு&nbsp; இருக்கிறது.</p><p>மேலும் தங்களின்&nbsp; தனி அலுவலர் நேரடி விசாரணை மற்றும் கடிதத்தின் மூலமாக மாணவர்கள் மீது உள்ள வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வருக்கு தகவல்&nbsp; தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு மற்றும் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்கள், உத்தரவுகள்,&nbsp; அரசாணைகள்&nbsp; எதையுமே இந்த கல்லூரி முதல்வர் மதிக்காமல் தான் தோன்றி தனமாக செயல்படுகிறார். இப்படி&nbsp; விதிக்கு புறம்பாக செயல்படும் முதல்வர் மீது பல புகார்கள் மோசடி குற்ற சாட்டுகள் இருந்தும் நடவடிக்கை&nbsp; இல்லை.&nbsp;&nbsp;</p><p>எனவே தாங்கள்&nbsp; தனி அலுவலர் பாரபட்சம் பார்க்காமல் மாணவர்கள் நலன் கருதி&nbsp; &nbsp;கல்லூரி முதல்வர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில்&nbsp; மாணவர்களுடன் இணைந்து பெற்றோர்கள், தேவர் கல்வி நலச்சங்கம்,&nbsp; &nbsp;தேவர் கல்லூரி மீட்பு குழு, அனைத்து சமுதாய அமைப்புகள்&nbsp; மற்றும் முக்குலத்தோர் சமுதாய அமைப்புகள் ஒன்றிணைத்து கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்காத உங்களுக்கு தனி அலுவலர் எதிராகவும் கல்லூரி முதல்வருக்கு எதிராகவும்&nbsp; மிகப்பெரிய போராட்டங்களை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.&nbsp;</p><p>தாங்கள் தயவு கூர்ந்து இதில் தலையிட்டு&nbsp; மாணவர்களின்&nbsp; &nbsp;எதிர் காலம் கருதி&nbsp; அவர்கள்&nbsp; மீது உள்ள வழக்குகளை முடித்து வைத்து அவர்கள் எதிர்காலத்தை நல்லபடியாக அமைய வேண்டும் என வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p>