<p><b>தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட செல்வநாயகபுரம் பகுதியில் உள்ள&nbsp; பாதாளச் சாக்கடை மின் மோட்டார் அறையை தூத்துக்குடி&nbsp; மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</b></p><p>தொடர்ந்து, அய்யர்விளை மற்றும் அம்பேத்கார் நகர் பகுதியில் தண்ணீர் தேங்கும் பகுதிகள், சாலை வசதிகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.</p><p>இந்த ஆய்வின்&nbsp; மாமன்ற உறுப்பினர் நாகேஸ்வரி, உதவி செயற் பொறியாளர் பிரின்ஸ், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், ஜோஸ்பர்&nbsp; மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.</p>