குடிபோதையில் தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
நிருபர்
March 26, 2022
குடிபோதையில் தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
<p><b>ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடிபோதையில் தகராறு செய்து கத்தி மற்றும் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்</b></p><p>ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆறுமுகநேரி ராஜமணியபுரம் பகுதியை சேர்ந்த தங்கதுரை மகன் பைசன் (54) என்பவரிடம் கடந்த 24.03.2022 அன்று அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் மகன் முத்துராஜ் (27) என்பவர் குடிபோதையில் தகராறு செய்து அவரை கத்தி மற்றும் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.</p><p>இது குறித்து பைசன் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அமலோற்பவம் வழக்குப்பதிவு செய்து மேற்படி முத்துராஜூவை கைது செய்தார்.</p>