<p><b>தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை கடத்திச்சென்று குழந்தை திருமணம் செய்தவர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.</b></p><p>தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் முள்ளக்காடு பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் சந்துரு (19) என்பவர் கடந்த 21.03.2022 அன்று 17 வயது சிறுமியை கடத்தி சென்று தூத்துக்குடி பாலவிநாயகர் கோவிலில் வைத்து குழந்தை திருமணம் செய்துள்ளார்.</p><p>இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா வழக்குப்பதிவு செய்து மேற்படி சந்துருவை கைது செய்தார்.</p>