<p><b>தூத்துக்குடி மாநகராட்சி 51 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் மந்திரமூர்த்தி, திமுக வேட்பாளர் முத்துராஜா, அமமுக வேட்பாளர் பேச்சிமுத்து உள்ளிட்ட 10 பேர் போட்டியிட்டனர்.</b><br></p><p>இந்த நிலையில், கடந்த 19ம் தேதி நடைபெற்ற தேர்தல் வாக்கு பதிவின் போது, தபால் வாக்குகள் 9 உட்பட மொத்தம் 2617 வாக்குகள் பதிவாகின.   இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடந்தது. பிற்பகலில் முடிவு அறிவிக்கப்பட்டது. </p><p>இதில் அதிமுக வேட்பாளர் மந்திரமூர்த்தி 779 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  இரண்டாவதாக திமுக வேட்பாளரான முத்து ராஜ் 777 வாக்குகள் பெற்று இரண்டாம் இடமும், அமமுக வேட்பாளர் பேச்சிமுத்து  623  வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தார். </p><p>இதனையடுத்து,  அதிமுக வேட்பாளர் மந்திரமூர்த்தி 2 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.</p>