7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொது பெயர்.. முதல்வர் அறிவிப்பு
நிருபர்
December 04, 2020
7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொது பெயர்.. முதல்வர் அறிவிப்பு
<p><b>7 உட்பிரிவினரைச் சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என குறிப்பிட மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்தார்.</b></p><p>சிவகங்கை மாவட்டத்திற்கு இன்று கொரோனா, ஆய்வுப்பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். </p><p>சிவகங்கையில் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.27.46 கோடியில் 30 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.<br></p><p>ரூ.36.43 கோடி மதிப்பீட்டில் பல்வேறு துறை சார்பில் 27 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். சிவகங்கை மாவட்ட ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.<br></p><p>பின்னர், முதல்வர் பழனிசாமி பேசுகையில், 7 உட்பிரிவினரைச் சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என ஒரே பெயரில் குறிப்பிட மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்தார்.<br></p><p>தமிழகத்தில் உள்ள பள்ளர், குடும்பன், தேவேந்திரகுலத்தான், கடையன், பன்னாடி மற்றும் காலாடி ஆகிய வகுப்புகளை எஸ்.சி பட்டியலில் இருந்து நீக்கி, 6 வகுப்புகளையும் சேர்த்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.<br></p><p>இந்த கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று 7 உட்பிரிவினரைச் சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என ஒரே பெயரில் குறிப்பிட மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைக்கும் என்று கூறியுள்ளார்.<br></p>