கலவரங்களைத் தூண்ட சட்டவிரோதமான பணம் பெற்றதா பி.எப்.ஐ கட்சி ? 26 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
நிருபர்
December 04, 2020
கலவரங்களைத் தூண்ட சட்டவிரோதமான பணம் பெற்றதா பி.எப்.ஐ கட்சி ? 26 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
<p><b>அமலாக்கத்துறையினர் பல்வேறு மாநிலங்களில் ஒரே நேரத்தில் 26 இடங்களில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.</b><br></p><p>சென்னை,மதுரை, தென்காசி, பெங்களூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மல்லபுரம் உள்ளிட்ட நகரங்களில் அமலாக்கததுறை அதிகாரிகள் சோதனை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியின் தலைமையகம் உட்பட பல்வேறு அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர்.<br></p><p>இச்சோதனையின்போது அக்கட்சியின் வங்கிக் கணக்குகள், பணப்பரிமாற்றங்கள் சோதனையிடப்பட்டன.<br></p><p>கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களைத் தூண்ட மிகப்பெரிய தொகை இக்கட்சியினருக்கு கை மாறியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.<br></p><p>பி.எப்.ஐ கட்சியின் வங்கிக்கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்ட 120 கோடி ரூபாயில் 50 கோடிக்கும் மேல் பணம் வெளிநாட்டில் இருந்து வந்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.<br></p><p>டெல்லியின் ஷகீன் பாக்கில் வன்முறை வெடித்தபோதும் இந்த கட்சிக்கு இருந்து பணம் வந்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.<br></p>