<p><b>செய்துங்கநல்லூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிரபல ரவுடி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.</b></p><p>மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன்&nbsp; மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அருள் தலைமையில் உதவி ஆய்வாளர்&nbsp; சதீஷ் தலைமை காவலர் குணசேகரன், முதல் நிலை காவலர்கள் வேம்பு ராஜ், கைலேயங்கிரிவாசன், ஆனந்தராஜ், முத்துக்குமார், நாராயணசாமி, காவலர்கள் ஜான் அந்தோணி ராஜ் மற்றும் பட்டவராயன் நேற்று (17.01.2022) ரோந்து பணியில் ஈடுபட்ட போது&nbsp; செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செய்துங்கநல்லூர் சுடுகாட்டுப் பகுதி அருகே இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த&nbsp; செய்துங்கநல்லூர்,வி.கோவில்பத்து மந்திரம் மகன் சுந்தரம் (எ) கோட்டை (22)</p><p>கொங்கராயகுறிச்சி பழனி மகன் வேல்பாண்டி (20), மற்றும் செய்துங்கநல்லூர் அய்யமார் தெரு, கொம்பையா மகன் கிருஷ்ணமூர்த்தி (19) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.</p><p>உடனடியாக மேற்படி போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் TN 50 AC 7113 (TVS Apache) என்ற எண் கொண்ட இருச்சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.</p><p>இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>மேலும் மேற்படி நபர் சுந்தரம் (எ) கோட்டை என்பவர் மீது ஏற்கனவே செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கு உட்பட 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.</p>