முத்தையாபுரம் அருகே அரசு பேருந்தில் பெண் பயணி தவறவிட்ட ரூ 22,000 பணம் ஒப்படைப்பு!
நிருபர்
January 07, 2022
முத்தையாபுரம் அருகே அரசு பேருந்தில் பெண் பயணி தவறவிட்ட ரூ 22,000 பணம் ஒப்படைப்பு!
<p><b>முத்தையாபுரம் அருகே அரசு பேருந்தில் பெண் பயணி ஒருவர் தவறவிட்ட ரூ 22,000 அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.</b><br></p><p>தூத்துக்குடி பாத்திமா நகர் சேர்ந்த ராஜா என்பவரது மனைவி பாத்திமா. இவர் இன்று ( ஜனவரி 7) தூத்துக்குடியிலிருந்து கோவங்காடு க்கு செல்ல TN 74 N 1545 எண் கொண்ட அரசு பேருந்தில் செல்லும்பொழுது அவர் வைத்திருந்த ரூபாய் 22,000 ஆயிரம் பணம் பேருந்தில் தவறவிட்டுள்ளார்.</p><p>இது குறித்து அவர் முத்தையாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தவறிட்ட பணம் தங்களிடம் இருப்பதாக கூறி அப்பேருந்தின் ஓட்டுநர் ஆறுமுகச் சாமி நடத்துனர் அப்பாச்சி ஆகியோர் காவல் நிலையத்தில் காவல்துறையினர் முன்பு உரியவரிடம் ஒப்படைத்தனர்.</p><p>தவறிவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் நேர்மையை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் பாராட்டினர்.</p>