தூத்துக்குடியில் பிரபல ரவுடி கைது!
நிருபர்
December 13, 2021
தூத்துக்குடியில் கொலை, கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடியை கைது செய்தனர்.
<p dir="ltr"><span style="font-size: 16px;"><b>தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை, கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடியை கைது செய்தனர்</b>.</span><br></p><p dir="ltr"><span style="font-size:16px" ;=""> மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுபடி, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் முத்து கணேஷ் மற்றும் போலீசார் நேற்று (12.12.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த வேல்முருகன் (எ) பானா வேல்முருகன் (28), த/பெ. ரவி, கீதாஜீவன் நகர், தூத்துக்குடி, என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் அவரை கைது செய்தனர்.</span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">இது குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</span></p><p>
</p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">மேற்படி கைது செய்யப்பட்ட வேல்முருகன் (எ) பானா வேல்முருகன் என்பவர் மீது முத்தையாபுரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 8 வழக்குகளும், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 7 வழக்குகளும், கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்தில் ஒரு வழக்கும், தெர்மல்நகர் காவல் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கும், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கும் என மொத்தம் 18 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.</span></p>