தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டர் பலி!
நிருபர்
December 12, 2021
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
<p dir="ltr"><b><span ;="" style="font-size: 16px;">தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டர் பரிதாபமாக </span><span ;="" style="font-size: 16px;">உயிரிழந்தார்.</span></b><br></p><p>
</p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">தூத்துக்குடி பிரையன்ட் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் விநாயக சுந்தரம் என்ற சுரேஷ் (வயது 44). கேபிள் டி.வி. ஆபரேட்டர். இவர் நேற்று இரவு தூத்துக்குடி அண்ணா நகர் 2-வது தெருவில் வீடுகளுக்கு கேபிள் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது மின் வயரில் கேபிள் பட்டதால் எதிர்பாராதவிதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.</span></p><p dir="ltr">
<span style="font-size:16px" ;="">இதில் பலத்த காயம் அடைந்த விநாயக சுந்தரம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</span></p>