<p dir="ltr"><b>தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.&nbsp;</b><br></p><p dir="ltr">தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரையண்ட் நகர், அம்பேத்கர் நகர், ரகுமத் நகர் உள்ளிட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.&nbsp; &nbsp;</p><p dir="ltr">அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.</p><p dir="ltr"> </p><p dir="ltr">இந்நிகழ்வின் போது கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கீதா ஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா, பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.</p>