<p><b>புரெவி புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூருக்கு நாளை&nbsp; (வியாழக்கிழமை)&nbsp; செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.&nbsp;</b><br></p><p>வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் இன்று இரவு இலங்கையில் கரையைக் கடந்து டிசம்பர் 4 ஆம் தேதி அதிகாலை குமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்க உள்ளது. </p><p>இந்நிலையில், புயல் காரணமாக தென் தமிழகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் சென்னை மற்றும் பெங்களூரு விமானங்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது<br></p>