<p dir="ltr"><b><span ;="" style="font-size: 16px;">முத்தும்மாள் காலனி </span><span ;="" style="font-size: 16px;">குடியிருப்புகளைச் சுற்றி பல நாட்களாக வடியாமல் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.</span></b><br></p><p> </p><p dir="ltr"><span style="font-size: 16px; color: rgb(156, 0, 255);" ;=""><b>இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் :</b></span></p><p dir="ltr"> <span style="font-size:16px" ;="">தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் இரண்டு மற்றும் ஐந்து ஆகியவற் றை</span><span style="font-size:16px" ;=""> உள்ளிடக்கிய </span><span style="font-size:16px" ;="">முத்தம்மாள் காலனி 4வது தெரு இணைப்பான </span><span style="font-size:16px" ;="">அழகர் பள்ளி யின் மேல்புறம்</span><span style="font-size:16px" ;=""> உள்ள பழைய ஷீபா பள்ளி அமைந்து இருக்கும் தெருவின் மேற்கு </span><span style="font-size:16px" ;="">பகுதிகளில் குடியிருப்புகளைச் சுற்றி பல நாட்களாக வடியாமல் தேங்கி நிற்கும் மழைரால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மற்றும் குழந்தை பள்ளிக்குச் செல்ல வீட்டிலிருந்து வெளியே வர முடியாமல்  அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. </span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">இது குறித்து  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப் பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அதனை கண்டித்தும், உடனடியாக மழைநீரை அகற்ற கோரியும் நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளோம் என தெரிவித்தனர்.</span><br></p>