<p><span style="font-weight: 700;">உதயநிதி ஸ்டாலின் 44 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.</span><br></p><p>தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்&nbsp; 44 வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.<br></p><p>அதனை முன்னிட்டு, தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன்&nbsp; &nbsp;வழிகாட்டுதலின்படி,&nbsp; தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி செயலாளர் ஸ்டாலின் தலைமையில் மாப்பிள்ளையூரணியில் 100 தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலை ஆகியவற்றை ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார், ஒன்றிய செயலாளர் மாடசாமி ஆகியோர் வழங்கினர்.</p><p>நிகழ்ச்சியில், ஒன்றியதுணை செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான அந்தோணி தனுஷ்பாலன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜ் சதிஷ், சுபாஷ், கிளைச் செயலாளர்கள் பிரபாகர், நெல்சன் மாவட்ட பிரதிநிதி நெல்சன், கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்..<br></p><p>தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதாஜீவன்&nbsp; வழிகாட்டுதலின்படி, தேரடி பகுதியில் சண்முகபுரம் பகுதி இளைஞரணி செயலாளர் சூர்யா தலைமையில் இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டன.<br></p><p>நிகழ்ச்சியில், பகுதி செயலாளர் சுரேஷ்குமார் மாவட்ட பிரதிநிதி சக்திவேல் வார்டு இளைஞரணி செயலாளர் ராஜா, பில்லா கவுதம், பில்லா பாபு, அய்யாசாமி, ராக் இசக்கி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>