இலவச வீட்டுமனைபட்டா, மயான மேடை அமைத்து தர வேண்டி முடிதிருத்துவோர் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நிருபர்
November 19, 2021
சிஜடியூ முடி திருத்துவோர் சங்கத்தின் சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா மயான மேடை வேண்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
<p><b>சிஜடியூ தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்கத்தின் சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது..</b><br></p><p>தூத்துக்குடி முடி திருத்தும் தொழிலாளருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டியும், விளாத்திகுளம் வேம்பார் ஊராட்சியில் சுடுகாடு தகனமேடை ( மயானம் ) நிரந்தரமாக அமைத்திட கோரியும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது..<br></p><p>பின்னர், மாவட்ட ஆட்சியர் தொழில் தொடங்க தேவையான கடன் உதவிகளை பெற்றுத் தருவதாகவும் உறுதி அளித்தார் . <br></p><p>உடன், மாவட்ட நிர்வாகிகள் டென்சிங் , நாகராஜன், சரவணன், கண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்...<br></p>