<p dir="ltr"><span style="font-size: 16px;"><b>தூத்துக்குடியில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.</b></span><br></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வந்தது. கடைசியாக கடந்த </span><span style="font-size:16px" ;=""><a href="tel:13032020">13.03.2020</a></span><span style="font-size:16px" ;=""> அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. அதன்பிறகு கொரோனா தொற்று காரணமாக முகாம் நடத்தப்படவில்லை. இந்நிலையில், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு நாளை (நவ.12) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.&nbsp;</span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">இதுதொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் அலுவலக செய்திக் குறிப்பில்:</span></p><p dir="ltr"> <span style="font-size:16px" ;="">"தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் </span><span style="font-size:16px" ;=""><a href="tel:12112021">12.11.2021</a></span><span style="font-size:16px" ;=""> அன்று காலை 10.30 மணி அளவில் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.&nbsp;</span></p><p> </p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, பொறியியல் மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் பயோடேட்டா, கல்விச் சான்றுகளுடன் கலந்துகொள்ளலாம்.</span></p><p dir="ltr"><span ;="" style="font-size: 16px;">தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படும் பட்சத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. விவரங்களுக்கு </span><span ;="" style="font-size: 16px;"><a href="tel:04612340159">0461-2340159</a></span><span ;="" style="font-size: 16px;"> என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என&nbsp;தெரிவிக்கப்பட்டுள்ளது.</span><br></p>