<p><b>ஆலையை இடைக்காலமாக திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.</b><br></p><p>தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இடைக்காலமாக திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில்  கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில், வேதாந்தா நிறுவன கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்  நிராகரித்துள்ளது.<br></p><p>ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட் , வேதாந்த நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.</p>