<p><b>வாலசமுத்திரம் ஊராட்சிமன்ற துணைத்தலைவராக அசோக்குமார் இன்று&nbsp; பதவி ஏற்றுக்கொண்டார்.</b></p><p>தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9-ந்தேதிகளில் நடந்தது. இதனிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் கடந்த 12-ந்தேதி எண்ணப்பட்டன.</p><p>இதில், தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், வாலசமுத்திரம் ஊராட்சியில் காலியாக உள்ள தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான நடைபெற்ற தேர்தலில்,<span style="font-weight: bold;"> <span style="color: rgb(206, 0, 0);">"வலசை</span></span><b style="color: rgb(206, 0, 0);">" அசோக்குமார் </b>ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான இடத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத்தொடர்ந்து அவர் ஊராட்சி மன்ற <span style="font-weight: bold; color: rgb(206, 0, 0);">துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.</span></p><p>அவருக்கு ஊராட்சி மன்ற தலைவர், செயலர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.</p>