<p><b>விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புகையிலை பதுக்கி வைத்து&nbsp; விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.</b><br></p><p>தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்&nbsp; உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில்&nbsp; போலீசார் ஆங்காங்கே தீவிர சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .<br></p><p>போலீசாருக்கு&nbsp; கிடைத்த இரகசிய தகவலின் படி விளாத்திகுளம் மீரான் பாளையத்தை சேர்ந்த குருசாமி மகன் முருகவேல் (55) என்பவர்&nbsp; மளிகை கடை நடத்தி வந்த நிலையில் அவருக்கு சொந்தமான கடையில் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு விற்பனை செய்தது&nbsp; தெரியவந்தது, உடனே போலீசார் 4 சாக்கு பைகளில் ரூபாய் 28,000/- மதிக்கத்தக்க புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.<br></p><p>மேற்படி புகையிலைப் பொருட்களை&nbsp; குழந்தைகளுக்கு விற்பனை செய்த அதே ஊரைச் சேர்ந்த முருகவேல் மகன் ராதாகிருஷ்ணன் (26), மற்றும் முனியசாமி மகன் மாரி கண்ணன் (27) ஆகிய மூன்று&nbsp; பேரையும் செய்து சிறையில் அடைத்தனர்.<br></p>