லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு.. அச்சத்தில் அரசு ஊழியர்கள் : பல லட்சம் ரூபாய் பறிமுதல்!
நிருபர்
October 01, 2021
லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு.. அச்சத்தில் அரசு ஊழியர்கள் : பல லட்சம் ரூபாய் பறிமுதல்!
<p><b>வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.</b></p><p>தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பத்திரப்பதிவுத்துறை அலுவலகம், வட்டார போக்குவரத்து துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் வசூல் வேட்டை நடத்துவதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் வந்தது. அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.இதில் கணக்கில் வராத பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. லஞ்ச ஒழிப்புத்து றையினரின் இந்த அதிரடி ரெய்டால் அரசு ஊழியர்கள் வட்டாரம் அச்சத்தில் உறைந்துள் ளது.</p>