தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக முதல்வர் விருது வழங்கி பாராட்டு!
நிருபர்
August 14, 2021
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக முதல்வர் விருது வழங்கி பாராட்டு!
<p><b>“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தூத்துக்குடி, அரியலூர், சேலம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்.</b></p><p>திமுக தனது தேர்தல் அறிக்கையில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு 100 நாள்களில் தீர்வு காணப்படும் என கூறப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. </p><p>இதைத்தொடர்ந்து, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டதின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், " உங்கள் தொகுதியில் முதலமைச்சர் " என்ற திட்டம் 100 நாட்களை இன்றுடன் நிறைவு பெறுகிறது. </p><p>மேலும், இதுவரை “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் நான்கரை லட்சம் மனுக்கள் பெறப்பட்டு 100 நாட்களில் இரண்டு லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் அரியலூர், சேலம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விருது வழங்கினார்.</p>