<p><b>காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே  பல கோடி ரூபாய் மதிப்பிலான பூதேவி உலோக சாமி சிலை மீட்கப்பட்டது</b>. <br></p><p>கிழக்கு கடற்கரைச் சாலை பக்கிங்காம் கால்வாய் அருகே சிலை கடத்தல் நடைபெறுவதாகக்   சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலை அடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். </p><p>அப்போது  நெருப்பூரில் கையில் பையுடன் வந்த இருவரை மறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உரிய ஆவணங்களின்றி அவர்கள் வைத்திருந்த  பூதேவி உலோக சிலையை வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக சிலையை பறிமுதல் செய்தனர்.</p><p>இவர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான வேல்குமார், செல்வம் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் சிலையைக் கைமாற்றிவிட சென்றனரா?இவர்கள் பின்புலம் என்ன? என போலீசார்  தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்</p>