<p dir="ltr"><b>எப்போதும்வென்றானில் உள்ள அருள்மிகு சோலைச்சாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுகிறது.</b></p><p dir="ltr">இதுதொடர்பாக தக்கார் சிவகலைப்பிரியா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:</p><p dir="ltr">தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம்&nbsp; வட்டம், அருள்மிகு சோலைச்சாமி திருக்கோவிலில் காலியாக உள்ள நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட உள்ள கீழ்காணும் பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதி உள்ள இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 08.08.2021- ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.</p><p dir="ltr">பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய தகுதிச் சான்றுகளுடன் தக்கர், அருள்மிகு சோலைச்சாமி திருக்கோயில், எப்போதும் வென்றான், ஓட்டப்பிடாரம்&nbsp; வட்டம், தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதர விவரங்களை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் வந்து தெரிந்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p><p dir="ltr">1 ) பதவியின் பெயர் : பூசாரி -1</p><p dir="ltr">காலியிடம் எண்ணிக்கை : 1</p><p dir="ltr">தகுதிகள் : </p><ol><li>தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.</li><li>அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆகம பாடசாலையில் ஒரு வருடம் பயின்றதற்கான பயிற்சிசான்று பெற்றிருக்க வேண்டும். </li><li>18 வயது நிரம்பியவராகவும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.</li></ol><p dir="ltr">ஊதிய விகிதம் : 13200 - 41800 ( நிலை 14, தளம் 1)</p><p dir="ltr">2 ) பதவியின் பெயர் : காவல்<br></p><p dir="ltr">காலியிடம் எண்ணிக்கை :&nbsp; 1</p><p dir="ltr">தகுதிகள் : </p><ol><li>தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.</li><li>18 வயது நிரம்பியவராகவும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.<br></li></ol><p dir="ltr">ஊதிய விகிதம் : 11600 - 36800 ( நிலை 12, தளம் 1)</p><p dir="ltr">3 ) பதவியின் பெயர் : பலவேலை</p><p dir="ltr">காலியிடம் எண்ணிக்கை :&nbsp; 1</p><p dir="ltr">தகுதிகள் : </p><ol><li>தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.</li><li>18 வயது நிரம்பியவராகவும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.<br></li></ol><p dir="ltr">ஊதிய விகிதம் : 10000 - 31500 ( நிலை 10, தளம் 1)</p>