<p>இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில்,<br></p><p>மக்கள் மத்தியில் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்காக்கவும் கட்சி தலைவருக்காகவும் தொடர்ந்து மலிவான தரம் தாழ்ந்த கருத்துக்களை பதிவிடுவதாக சுட்டிக்காட்டபட்டுள்ளது.<br></p><p>இத்தகைய அநாகரிகமான பதிவுகள் பொது அமைதியை சீர்குலைப்பதற்க்காகவும், குற்றச்செயல்களில் ஈடுபட வித்திடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.<br></p><p>பெண்களுக்கு எதிரான குற்றசெயல் ஊக்கும்விக்கும் விதமாக அமைந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது தொடர்பாக மே மாதம் முதல் தற்போது வரையில் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக 75 நபர்கள் மீது வழக்குகள் பதியபட்டுள்ளதுதாகவும்&nbsp;<br></p><p>இவ்வழக்குகளில் எல்லை மீறிய வகையில் அவதூறுகளை பதிவிட்ட 16 நபர்கள் மட்டுமே கைது செய்யபட்டதாகவும் காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.<br></p><div><br></div>