சாக்குமூட்டையில் ஆற்றுமணல் திருடியவர் கைது!
நிருபர்
July 01, 2021
சாக்குமூட்டையில் ஆற்றுமணல் திருடியவர் கைது!
<p><b>ஆத்தூர் அருகே சாக்குமூட்டையில் ஆற்றுமணல் திருடியவர் கைது செய்யப்பட்டார்</b>.<br></p><p>ஆத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் 30.06.2021 அன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஆத்தூர் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்படுகையில் வடக்கு மரந்தலை பகுதியை சேர்ந்த அய்யம்பெருமாள் மகன் அந்தோணி (47) என்பவர் ஆற்று மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.<br></p><p>இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரி அந்தோணி என்பவரை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 10 சாக்கு மூடைகள் ஆற்றுமணலும் பறிமுதல் செய்யப்பட்டது.<br></p>