<p><b>நடிகை கவிதாவின் மகன் இறந்து 12 நாட்களே ஆன நிலையில் அவரது கணவரும் நேற்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது</b>. </p><p>ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை கவிதா. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் மட்டும் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். </p><p>கவிதா தமிழில் ஆட்டுக்கார அலமேலு. காற்றினிலே வரும் கீதம். அந்தமான் காதலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் தற்போது ஒளிபரப்பாகும் என்றென்றும் புன்னகை தொடரில் இவர் நடிக்கும் கதாபாத்திரம் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/06/30/11625058641.jpg" title="Vilasal news" style="width: 100%;"><br></p><p>பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். தற்போது 55 வயதான நடிகை கவிதா அன்பான கணவர், செல்ல மகன் என்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த கவிதாவின் வாழ்க்கையில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி விட்டது.<br></p><p>கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவிய நிலையில் கவிதாவின் கணவர் மற்றும் மகன் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகன் சிகிச்சை பலனின்றி ஜூன் 17ஆம் தேதி உயிரிழந்தார்.<br></p><p>இந்நிலையில், மகன் உயிரிழந்த இரண்டு நாட்களிலேயே கவிதாவின் கணவர் தசரதரும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் ஜூன் 29-ஆம் தேதி இறந்தார். மகனையும் கணவரையும் அடுத்தடுத்து இழந்தது திரையுலகினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>