<p><b>முறப்பநாடு காவல் நிலைய&nbsp; எல்லைக்குட்பட்ட பகுதியில்,&nbsp; தங்கையை கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார்.</b>&nbsp;<br></p><p>தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வசவப்பபுரம் பசும்பொன் நகரைச் சேரந்தவர் சுடலைமுத்து. இவரது மகன்&nbsp; மாலை ராஜா (22), மகள் கவிதா (17) ஆவர். நேற்று (29.06.2021) கவிதாவின் சகோதரரான மாலைராஜாவிற்கும் கவிதாவிற்கும் செல்போன் பயன்படுத்துவதில் தகராறு ஏற்பட்டு கவிதா செல்போன் தர மறுத்துள்ளார்.<br></p><p>இதில் ஆத்திரமடைந்த மாலைராஜா கவிதாவை அரிவாளால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த கவிதா பாளைங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/06/30/11625038115.jpg" title="Vilasal news" style="width: 100%;"><br></p><p>இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்&nbsp; சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு தலைமறைவான கவிதாவின் சகோதரர் மாலைராஜாவை விரைந்து கைது செய்ய தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு மேற்பார்வையில் முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசாருக்கு உத்தரவிட்டார்.<br></p><p>மேற்படி உத்தரவின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய போலீசார் கவிதாவின் சகோதரர் மாலைராஜாவை வல்லநாடு மலையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.<br></p>