13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது.
நிருபர்
June 29, 2021
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது.
<div></div><div><b>காயல்பட்டனத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.</b> </div><div><br></div><div>தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டனம், அக்பர்ஷா தெருவைச் சேர்ந்தவர் முகம்மது அலி மகன் முத்துவாப்பா (25), இவர் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.</div><div><br></div><div>இதுகுறித்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் இந்திரா விசாரணை நடத்தி, போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து முத்துவாப்பாவை கைது செய்தார். </div>