<p><b>பாகிஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்ட ஹெராயின் போதைபொருள் தூத்துக்குடி கடல்பகுதியில் பிடிப்பட்டுள்ளது</b>.</p><p>தூத்துக்குடி கடல்பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த&nbsp; போது இந்திய கடல் எல்லைக்குட்பட்ட கடலில் ஒரு படகு&nbsp; சென்று கொண்டு இருந்துள்ளது. அப்படக்கினை இந்திய கடலோர காவல்படையினர் சந்தேகித்து வழிமறித்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் பல கோடி மதிப்புள்ள ஹெராயின் மற்றும் 5 துப்பாக்கிகள் இருந்துள்ளது. அதில் இலங்கையை சேர்ந்த 6 பேர் இருந்துள்ளனர்.இலங்கையை சேர்ந்த அந்த நபர்கள் யார்? அவர்கள் பின்புலம் என்ன? தீவிர விசாரணை மேற்கொண்டத்தில் முதல் கட்டமாக அவர்கள்&nbsp; பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.<br></p><p>&nbsp;ஹெராயின் என்பது போதைப்பொருள் ஆசிய பாப்பி ஆலை விதைகளில் இருந்து வரும் மொரிஃபின் இருந்து செயலாக்கப்பட்ட ஒரு மிகவும் போதை மருந்து . இது மத்திய நரம்பு மண்டலத்தை தடுக்க கூடியது.<br></p><p>மத்திய, மாநில போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், உளவுப்பிரிவு அதிகாரிகள் ரகசியமாக விசாரணை செய்து வருகின்றனர்.</p>