<div align="left"><p dir="ltr"><b>தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரமேஷ் பிளவர் நிறுவனம் சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.&nbsp;</b><br></p></div><div align="left"> <p dir="ltr">தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரமேஷ் பிளவர் மில்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோரமண்டல் சென்னை சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (24.06.2021) நடைபெற்றது. </p><p dir="ltr">நிகழ்ச்சியில் ரூ.12 லட்சம் மதிப்பிலான இசிஜி மெசின், மல்டி பாரா மானிட்டர், பாயில் அனஸ்திஸ்யா மெசின் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களை ரமேஷ் பிளவர் மில்ஸ் தலைமை செயல் அதிகாரி பி.எஸ். ரமேஷ் மருத்துவ கல்லூரி முதல்வர் நேருவிடம் வழங்கினார்.</p> <p dir="ltr">இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கண்காணிப் பாளர் பாவலன், ரமேஷ் பிளவர் மில்ஸ் நிர்வாகிகள் சந்திரசேகர், தெய்வ நாயகம், சுப்பிரமணியன், ரோட்டரி கிளப் ஆப் கோரமண்டல் சென்னை முத்தையாபிள்ளை,ராஜபாண்டி, ரவிராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p></div>