ஆணி பலகை, தலைகவசத்தில் யோகா செய்து அசத்திய சகோதரர்கள்
நிருபர்
June 21, 2021
ஆணிப் பலகை, தலைகவசத்தில் யோகா செய்து அசத்திய சகோதரர்கள்
<p><b>ஆணி பலகையில் யோகாசனம் மற்றும் ஹெல்மெட், கண்ணாடி டம்ளர், நாற்காலி ஆகியவற்றில் உடலை வருத்தி புதுமையான முறையில் யோகாசனம் செய்து அசத்திய சகோதரர்கள்</b><br></p><p>மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் அசாருதீன் (20) சல்மான் கான் (18). இவர்கள் சிறுவயதிலிருந்தே பல்வேறு யோகாசனங்கள் மூலம் சாதனை புரிந்து வருகின்றனர்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/06/21/11624261725.jpg" title="Vilasal news" style="width: 100%;"><br></p><p>இவர்கள் ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி உலக யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு யோகாசனம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு யோகா சகோதரர்கள் இருவரும் 21 நிமிடங்களில் 21 யோகா ஆசனங்கள் செய்து அசத்தி உள்ளனர்.<br></p><p>ஆணி பலகையில் யோகாசனம் மற்றும் ஹெல்மெட், கண்ணாடி டம்ளர், நாற்காலி ஆகியவற்றில் உடலை வருத்தி புதுமையான முறையில் 21 ஆசனங்கள் செய்து சாதனை புரிந்துள்ளனர்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/06/21/11624261750.jpg" title="Vilasal news" style="width: 100%;"><br></p><p>மேலும் , இயற்கை உணவே உடலுக்கு ஆரோக்கியமானது. ஆகையால் காய்கறிகள், பழங்கள் மற்றும் இயற்கை உணவுகளான பருப்புகள், கம்பு, கேழ்வரகு ஆகியவற்றை உண்ண வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக பழங்கள், காய்கள், தானியங்கள் போன்றவற்றை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.<br></p>