<p><b>கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டு இருந்தது&nbsp; சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்தப்படம் தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது.</b><br></p><p>&nbsp;கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நூலக வாயிலில், காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டு இருந்தது. எந்த அடையாளமும் இல்லாத வெள்ளை உடை அணிந்த திருவள்ளுவர் படமே தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டது.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/06/17/11623931578.jpg" style="width: 100%;"><br></p><p>இந்நிலையில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் நூலக வாயிலில் இருந்ததால் அது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த திருவள்ளுவர் படம் பல ஆண்டுகளாக இவ்வாறுதான் இருந்து வருகிறது என பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.</p><p>இந்நிலையில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் அகற்றப்பட்டு தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட வெள்ளை உடை அணிந்த திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டதாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.</p><p><br></p>